என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன்
செய்தி அனுப்பு
ஒ..என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் –
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு
ஒ..பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு
ஒ..
யாரோ ? உன் காதலில் வாழ்வது யாரோ ?-
உன் கனவினில் நிறைவது யாரோ ?
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ !?
ஏனோ என் இரவுகள் நீள்வது, ஏனோ ?
ஒரு பகல் எனை சுடுவது ஏனோ,?
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்துயிருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?
இலையை போல் என் இதயம் தவறி விழுதே
காதல் ஒரு இலையுதிர் காலமாய் மாறும்
என் நினைவுகள் சருகுகலாகும்
அந்த நேரத்தில் மழையென வாராயோ
ஏதோ ஒரு பறவையின் வடிவினில் கூட
ஒரு சாலையில் எதிர்ப்படுவாயா
உன் காதலை சிறகென தாரையா
காதல் தர நெஞ்சம் காத்துயிருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?
நினைக்கும் போதென் நிழலும் ஏனோ சுடுதே
தென்மொழிதாஸ் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தென்மொழிதாஸ் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 13 மார்ச், 2009
கவிதைகள்
மனதின் பள்ளத் தாக்கில் இருந்துகவிதைகள் ஊர்ந்து விரல்களை எட்டும் முன்நடுங்கி மரித்து விறைக்கின்றனபின் அவை பாறைகளாய் இறுகியதுக்கங்களில் நசுங்கியோகாற்றாய் அலைகிற நினைவுகளில் தடுக்கியோதூக்கமாற்ற முகாந்தரங்களின் கொடிதனில் தொங்கியோகொலை செய்யப்பட்ட கவிஞனின்நிராசைமிக்க கவிதை வரிகளைக்கொண்டு வறுகின்றனஅவ் வரிகளில் எல்லாம்மரணத்தினும் பாழடைந்த தன்மைபடிந்திருப்பதகவே உணர்கிறேன்.
- தேன்மொழி தாஸ்
- தேன்மொழி தாஸ்
லேபிள்கள்:
தென்மொழிதாஸ் கவிதைகள்
ஆராரோ

நிழலுள்ள செடிகளை அறியாத காளானைப் போல்
காட்டில் அமர்கிறேன்
மரங்கள் புலம்புகின்றன
காட்டில் அமர்கிறேன்
மரங்கள் புலம்புகின்றன
கூர்மையான நகங்கள் கொண்ட கால்களால்
காற்று இல்லைகளில் நடப்பது பற்றி
காற்று இல்லைகளில் நடப்பது பற்றி
சருகுகளோ உதிரும் போது
காற்றின் பாதச்சுவடுகளை கண்களாக்கிவிட்டுச் சாகின்றன
காற்றின் பாதச்சுவடுகளை கண்களாக்கிவிட்டுச் சாகின்றன
அப்போதெல்லாம்
நிர்வானப்படுத்த முடியாத காட்டு மரங்களின் ஆடைகளை
முத்தமிடுகிறேன்
நிர்வானப்படுத்த முடியாத காட்டு மரங்களின் ஆடைகளை
முத்தமிடுகிறேன்
நதியின் துளிகள்
மரங்களின் சதைக்குள் நீல நிறத்தில் இல்லை
ரத்தமென உயிர் வலிமை குன்றியதுமில்லை
மரங்களின் சதைக்குள் நீல நிறத்தில் இல்லை
ரத்தமென உயிர் வலிமை குன்றியதுமில்லை
ஆராரோ என்ற சொல் காட்டுப் பூக்களின் வாசனை என்றும்
ஆரிரோ என்ற சொல் மான்களின் விழி என்றும்
நான் யாரிடம் சொல்வது
ஆரிரோ என்ற சொல் மான்களின் விழி என்றும்
நான் யாரிடம் சொல்வது
அங்கங்கே நீண்டு கொண்டிருக்கும்
மரங்களின் கரங்களை அணைத்து
பைத்தியக்க் காரியைப்போல் இவற்றை பாடி அலைகிறேன்
மரங்கள் உறங்குகின்றன
மரங்களின் கரங்களை அணைத்து
பைத்தியக்க் காரியைப்போல் இவற்றை பாடி அலைகிறேன்
மரங்கள் உறங்குகின்றன
விடியற்காலையில்
காட்டுக்குள் வீழும் ஒளிக்கற்றைகள்
மரங்களின் புருவங்களாகின்றன.
காட்டுக்குள் வீழும் ஒளிக்கற்றைகள்
மரங்களின் புருவங்களாகின்றன.
- தேன்மொழி தாஸ்
லேபிள்கள்:
தென்மொழிதாஸ் கவிதைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

